என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறுமி உடல் கருகி பலி"
புதுச்சேரி:
மேயிலாடுதுறை நத்தம் பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ். இவரது மனைவி ஷீலாமேரி. இவர்களது மகள் அனுஷ்கா (வயது8) இந்த சிறுமி காரைக்கால் திருநள்ளாறு தென்னங்குடி பகுதியில் உள்ள உறவினர் அருண் முரளி வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று அனுஷ்கா அங்குள்ள தேவாலயத்தில் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஏற்றி வைத்திருந்த மெழுகுவர்த்தி தீ அனுஷ்காவின் உடையில் பற்றிக்கொண்டது. தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்காமல் அனுஷ்கா அலறினார்.
உடனே அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அனுஷ்காவை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று இரவு அனுஷ்கா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருநள்ளாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்